Posts

Showing posts from 2022

முருகனுக்கு ஏன் காவடி எடுக்கிறோம் தெரியுமா?

ஒவ்வொரு தெய்வங்களையும் ஒவ்வொரு விதமாகவே வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். நம் முன்னோர்கள் எந்த வழிமுறைகளை பின்பற்றினார்களோ அதே வழிமுறைகளைத் தான் நாமும் பின்பற்றி நடக்கிறோம்.  முருகனுக்கு காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், மாலை அணிந்து பாத யாத்திரை செல்லுதல், விரதம் கடைபிடித்தல், மொட்டை போடுதல் என்று பலவற்றை கடைபிடித்து வருகிறோம். ஆனால், எதற்காக காவடி எடுக்கிறோம் என்று தெரியுமா?....  அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவர் இடும்பன். அகத்திய முனிவரோ, தனது வழிபாட்டிற்காக கயிலைமலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளையும் கொண்டு வரும்படி இடும்பனிடம் கூறினார். இந்த இரு மலைகளையும் திருவாவின்ன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி முருகன் திருவிளையாடலை நிகழ்த்தினார். அதற்காக, இடும்பனுக்கு வழி தெரியாமல் போகச் செய்தார். அதோடு, தான் குதிரை மீது செல்லும் அரசனைப் போன்று தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று நேரம் ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறினார். இடும்பனும் அவ்வாறே காவடியை இறக்கி வைத்து ஓய்வு...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. ஜன., 6ல், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.... உலகப் புகழ்பெற்ற கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இருதிருவிழாக்கள் பிரசித்தி பெற்றதாகும். மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம், வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 29ம் தேதி துவங்கி, ஜனவரி 4ம் தேதி வரை, தினசரி சுவாமி வீதியுலா நடக்கிறது. தேர்த்திருவிழா ஜனவரி 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு, ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது. ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், காலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை, சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மஹாபிஷேகம் நடக்கிறது. பின், காலை 10:00 மணிக்கு, சித்சபையில் ரகசிய பூஜை பஞ்சமூர்த்தி வீதியுலாவுக்கு பின், பகல் 2:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. ஜனவரி 7ம் தேதி, பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக...

தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கும் மந்திரம்

தீய  சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கும் மந்திரம்   🌺🌿முருகப் பெருமானை வணங்குதல் தமிழர்களிடையே தொண்டு தொட்டு இருந்து வரும் வழக்கம். முருகன் அல்லது கந்தன், குமரன் சிவபெருமான் பார்வதி தேவியின் புதல்வர், விநாயகப் பெருமானின் தம்பி. தமிழில் முருகன் என்றால் அழகு, இளமை ஆகியவற்றைக்  குறிக்கும்.   🌺🌿முருகனுக்கு, கார்த்திகேயா, சுப்பிரமண்யா, தண்டாயுதபாணி, சண்முகா எனப் பற்பல பெயர்கள் உண்டு. முருகனுக்கு ஆறு முகங்கள்  இருப்பதால் அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு. 🌺🌿நமக்கு நன்மை செய்பவர்கள் யார், தீமை செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய பிரச்சனைகளில் இருந்து  விடுபட அற்புத “முருகப் பெருமான் மந்திரம்” உள்ளது. 🌺மந்திரம்: ஓம் ரீங் வசரஹணப  🌺🌿சித்தர்களால் இயற்றப்பட்ட முருகனுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் உங்களால் இயன்ற போதெல்லாம் துதிப்பது நல்லது. செவ்வாய் கிழமைகள், சஷ்டி தினங்களில் முருகப்பெருமானுக்கு செந்நிற பூக்களை சமர்ப்பித்து இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் 1008 முறை உரு ஜெபித்து வழிபட்டு வந்தால் உங்...

பிரம்ம ஞானம் பெறும் முறை:

பிரம்ம ஞானம் பெறும் முறை: ***************************************** 1.விடுதலை பெற மனமார்த்த ஆவல் :  " தான் விடுதலை கட்டாயம் அடைந்தே தீருவேன் " என்ற உறுதியுடன் வேறொன்றும் வேண்டாதவரே ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதி உடையவர் ஆவர்  2.இகபரப் பொருள்கள் மீது விரக்தி : பொருள்கள் மீது விரக்தி பற்றற்ற நிலை பெற முடியாதவர்களுக்கு ஆன்மீக உலகில் நுழைய உரிமை கிடையாது 3, உள்நோக்கு சிந்தனை : ஐம்புலன்களைக் கொண்டு நாம் வெளிப்புறத்தை அறிகிறோம், புறப்பொருள்களை நோக்கிறோம். தன்னைத்தான் உணர விரும்புகிறவன் முதலில் "தன்னை தானறிய " முற்பட வேண்டும். 4, பாவங்களிலிருந்து வெளிப்படல்:  ஒருவன் தீயச் செயல்களை ஒழித்து மன அமைதி பெற்றாலொழிய அறிவளவில் கூட தன்னை தான் உணர்தல் என்பது இயலாத காரியம் 5. நற்குண நற்செயல்கள்: உள்நோக்கு, தவம், உண்மையுடன் கூடிய வாழ்வு பெற்றிருந்தாலொழிய கடவுளை அறிய முடியாது 6, நல்லவை, இனியவை: நல்லவை, எனபன ஆன்ம விவகாரங்களுக்கு உரியவை. இனியவை யாவும் இவ்வுலகில் சுகபோக வாழ்வுக்கு தேவை. இரண்டும் மனிதனை அண்டி வருகின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் மனிதன் சிந்தித்து பெற வேண்டும். அறிவுடை...

சிவதரிசனம்-#திருவடிக்காம்_பிறவி

#சிவதரிசனம்-#திருவடிக்காம்_பிறவி =============================== நாம் பூர்வசிவ புண்ணியத்தால் சிவ வணக்கம் செலுத்தி விட்டாேம்!! சிவ வணக்கம் செலுத்திய நம்மை காப்பது அவரது கடமை!! அக்கடமையால் இறைவன் திருவடி நம்மை காக்க எழுபாேகிறது!! அது எவ்வாறு நம்மை காக்கபாேகிறது என காண்பதே சிவ தரிசனம்!! இன்று.. திருச்சதகத்தில் 9 ஆவது பாட்டில் திருவடி குறிப்பு வருகிறது!! அங்கிருந்து... ================================ தவமே புரிந்திலன் தண்மலரிட்டு   முட்டாதிரைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக்     கன்பருள்ளாஞ் சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின்     திருவடிக்காம் பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம்     பரம்பரனே  ================================ #திருவடிக்காம் ============ மனிதனாம் பேறு பெற்றேன்!! இது அரிது அரிது எனகின்றார் யேனாே? சுயமாய் சிந்திக்கும் திறம் காெண்ட இப்பிறவியில் நான் சிந்தித்தது யாது?? ஏன் இந்த பிறப்பு? ஏன் இந்த வித்தியாசம்?? ஏன் இறந்து பாேகின்றார்?? இறந்து எங்கு இருப்பர்?? தேகம்  மண் புக, விண் புகுவது யாது?? இவற்றை எல்லாம் கற்பதாக கல்வி அறிவு இருக்க வே...

முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில்

 முருகன் வழிபட்ட செங்கல்பட்டு மாவட்டம் தையூர் முருகீஸ்வரர் கோவில்   அருள்மிகு முருகீஸ்வரர் திருக்கோவில் தையூர்-603103  செங்கல்பட்டு மாவட்டம்  இருப்பிடம்:  கேளம்பாக்கம் 5 கிமீ, திருப்போரூர் 8 கிமீ, சென்னை சென்ட்ரல் 40 கிமீ, செங்கல்பட்டு 32 கிமீ, மகாபலிபுரம் 12 கிமீ  மூலவர்: முருகீஸ்வரர், அழகிய சொக்கநாதர் அம்மன்: மரகதாம்பிகை நாயகர்: தைக்கஜ முருகன் (மணல் கல்லால் ஆனது) தலமகிமை: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் மரகதாம்பிகை சமேத முருகீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக முருகீஸ்வரரும் தாயாராக மரகதாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். கோவில் கல்வெட்டுகளில் அழகிய சொக்கநாதர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை (தைக்கஜ முருகன்) மணல் கல்லால் ஆனது என்பது சிறப்பம்சமாகும். தையூரில் உள்ள திருக்குளத்தில்  முருகப்பெருமான் நீராடி தந்தை முருகீஸ்வரனை வழிபட்டுச் சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதனால் தையூர் கோவில் முருகன் வழிபட்ட சிறப்பான தலமாகக் கருதப்படுகிறது. தெப்பக்குளத்தில் முருகனே நீராடியதால் தீராத வியாதிகள் தீரும், பில்லி...

திருப்போரூா் கந்தசுவாமி கோவில்

திருக்கோயில் வரலாறு: திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. திருப்போரூா் கந்தசாமி கோவிலை சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் கூறலாம். தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "புனிதப் போரின் இடம்" என்பது ஆகும். மூலவர் : கந்தசுவாமி அம்மன்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வன்னி மரம் ஊர் : திருப்போரூர் மாவட்டம்: செங்கல்பட்டு மாநிலம்: தமிழ்நாடு பாடியவர்கள்: அருணகிரிநாதர், சிதம்பர சுவாமி வரலாறு : இன்று இங்குள்ள கோயிலும் குளமும் முந்நூறு வருஷங்களுக்குள் உருவானவைதான். என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது. பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது. விக்கிரம சோழன...

பருவத மலைச் சிறப்புகள்

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.* *ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.* *இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது.* *3 ஆயிரம் அடி உயரமுள்ள  செங்குத்தான,* *’கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளை’* *கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயையும் தீர்க்கும்.* *நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.* *இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம்.* *அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.* *இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.* *அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாகக் காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.* *சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம் - சூலம் மற்றும் உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக் காணலாம்.* *மலை உச்சியில் ராட்சத...

கோயில் கந்தன்குடி முருகன்

கோயில் கந்தன்குடி முருகன்  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள கோயில் கந்தன்குடி கிராமத்தில் புகழ்பெற்ற வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த ஸ்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம். இரண்டு அசுரர்களால் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு அழிவு ஏற்படும் என அன்னை பராசக்தி நினைத்த காரணத்தினால், தன்னுடன் வந்த குழந்தையான முருகனைத் தங்கி இருக்கும்படி கூறியதால், முருகன் தங்கிய இந்த ஸ்தலம், கந்தன்குடி என பெயர் பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் முருகப் பெருமானை மணக்கோலம் கொள்ள, ஸ்ரீதேவசேனா அன்னை தவம் பூண்டு தென்திசை நோக்கி தனி ஆலயம் கொண்டு விளங்கி வருகிறார். தேவேந்திரன், ஐராவதம் என்று சொல்லக்கூடிய இரட்டை தந்தங்களுடைய வெள்ளை யானையை, தனது மகனின் தவத்தைக் காக்க கந்தன்குடிக்கு அனுப்பியதால், ஸ்ரீ முருகப் பெருமானுக்கு எதிரில் இங்கு ஐராவதம் வாகனமாக காட்சியளிப்பது தனி சிறப்பு .

பஞ்சகடம்ப தலங்கள்

                                                                                                    நிறைந்த கார்த்திகை அமாவாசை திருநாளில் தோஷங்கள் அனைத்தும் விலக்கி அருளும் கடம்பன் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் பஞ்ச கடம்ப தலங்கள்   பஞ்ச கடம்ப தலங்கள்: முருகப்பெருமான் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் வேல் வாங்கி சூரபத்மனை சம்ஹாரம் செய்ததால் வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தைப் போக்க, தந்தை சிவபெருமானின் ஆணைக்கேற்ப, முருகப்பெருமான் சிக்கலுக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் தலமான கீழ்வேளூர் தலத்தில் சிவபூஜை செய்து, அத்தலத்தை சுற்றியுள்ள 9 தலங்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து அங்கும் பூஜித்து, தோஷம் நீங்கப் பெற்றார். அவற்றில் மிக முக்கியமான ஐந்து தலங்கள், பஞ்சகடம்ப திருத்தலங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.  கந்தா! கடம்பா! என்றழை...

அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை

வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டியது அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்  பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.  இரவு அர்த்த ஜாமத்தில்  மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும். இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.  மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூ...

மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்

மதுரையில் மீனாட்சி தினமும்  8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.  இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.  அவை .. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி ப்ராத சந்தியில் – பாலா 6 – 8 நாழிகை வரையில் –  புவனேஸ்வரி 12 – 15 நாழிகை வரையில் – கெளரி மத்யானத்தில் – சியாமளா சாயரக்ஷையில் – மாதங்கி அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.  இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.  அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும். *ஒரேநாளில்* *புவனேஸ்வரி*, *கௌரி,சியாமளா*, *மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள த...

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள்

  மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை 1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்', 2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்', 3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்', 4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்', 5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள் அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் . அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார். சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில் இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள். சீறா நாகம் - நாகமலை கறவா பசு - பசுமலை பிளிறா யானை - யானைமலை முட்டா காளை - திருப்பாலை ஓடா மான் - சிலைமான் வாடா மலை - அழகர்மலை காயா பாறை - வாடிப்பட்டி பாடா குயில் - குயில்க...