பருவத மலைச் சிறப்புகள்

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.*

*ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.*

*இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது.*

*3 ஆயிரம் அடி உயரமுள்ள  செங்குத்தான,*

*’கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளை’*

*கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயையும் தீர்க்கும்.*

*நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.*

*இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம்.*

*அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.*

*இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.*

*அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாகக் காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.*

*சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம் - சூலம் மற்றும் உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக் காணலாம்.*

*மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது.*

*தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.*

*சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம்.*

*பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும்.*

*இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.*

*மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.*

*அது போல் நாமும்,*

*’கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை’*

*ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்.*

*48 பவுர்ணமி மற்றும் அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.*

*சகல நோயையும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் உண்டு.*

*மலைக்கு  வருபவர்கள்,*

*’உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள்’*

*வாங்கி வருவது முக்கியம்.*

*வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம்.*

*மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.*

*26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.*

*கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்…*sv. நற்பவி 💕 நற்பவி 💕 நற்பவி 🙏🏾

Comments

Popular posts from this blog

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்