திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோவில்
திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையில் அமைந்துள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமை கொண்ட தொன்மையான ஆலயங்களில் ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66வது தேவாரத்தலம் ஆகும்.
மூலவர்:பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்)
அம்மன் தாயார்:பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பாள்
தல விருட்சம்:பராய் மரம்
தீர்த்தம்:அகண்ட காவேரி
ஆகமம் பூஜை:சிவாமம்
புராண பெயர்:அகண்ட காவேரி
ஊர்:திருப்பராய்த்துறை
பிரார்த்தனை :
இந்த சிவனை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
இத்தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர்.
கோவில் ராஜகோபுரம் 7 நிலை உடையது...!
Comments
Post a Comment