திருக்கொள்ளிக்காடு - வேலை கிடைக்க வழிபட வேண்டிய ஆலயம்
வேலை கிடைக்கவில்லையா? இத்தலத்திற்கு செல்லுங்கள்..!!
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்..!!
இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படும் பட்டதாரிகளும், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என தேடி அலைவபர்களும் வழிபடக்கூடிய ஆலயம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் .
ஆலயத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு :
மூலவர் : அக்னீஸ்வர சுவாமி
தாயார் : மிருது பாத நாயகி
சனி பகவான் : பொங்கு சனி
முருகர் : தனுசு சுப்பிரமணிய சுவாமி
ஸ்தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
இது 1000 முதல் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு ஸ்தலம்.
இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார். சனி பகவான் சிவனை இங்கு அக்கினி வடிவில் வழிபட்டதால் மூலவர் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள சனி பகவான் பொங்கு சனியாக குபேர மூலையில் இருந்து செல்வதை வழங்குகிறார் .சனி பகவான் தன்னுடைய கட்டங்களில் இழந்தவர்களுக்கு மீண்டும் வளத்தை தரும் விதமாக இங்கு உள்ளார்.
இத்தலத்தில் 'ப" வடிவில் அமைந்திருக்கும் நவக்கிரகம் சிறப்பு வாய்ந்ததாகும் . பொதுவாக அனைத்து கோவில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வேறு வேறு திசை நோக்கி அமர்ந்திருக்கும்.
இந்த ஆலயத்தில் முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்ரமணியராக காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தில் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள சனிபகவான் கையில் கலப்பையை ஏந்தியிருப்பது கூடுதல் சிறப்பு.மேலும் இந்த ஆலயம் சனி பகவானின் திசையான மேற்கு நோக்கி அமர்ந்து இருப்பது ஒரு சிறப்பாகும். சனி பகவானின் பாதிப்புகள் குறைய இங்கு வழி படுவது சிறப்பாகும்.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 am to 12.00 pm மற்றும் மாலை 5.00 pm to 8.00 pm
முகவரி
ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்
திருக்கொள்ளிக்காடு
திருத்துறைப்பூண்டி தாலுகா
திருவாரூர் மாவட்டம். - 610205.
திருவாரூரில் இருந்து 30km தொலைவில் அமைந்துள்ளது .
இங்கு வன்னி, ஊமத்தை மற்றும் கொன்றை மரங்கள் முறையே செல்வம், மனஅமைதி மற்றும் குடும்ப ஒற்றுமையை குறிக்கும் விதமாய் அமைந்துள்ளன.
வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு செல்வது சிறப்பு. திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும், பொங்கு சனியையும் மனதார வழிபடுங்கள்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யுங்கள். வேலை கிடைக்க திருவாரூர் செல்ல இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள சனிபகவானுக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் நீங்கள் பிறந்த கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவன் காயத்ரி மந்திரத்தை மனதாரக் கூறுங்கள்.
வேலை கிடைத்ததும், வாங்கும் வருவாயில் கொஞ்சம் அன்னதானம் செய்யுங்கள். அத்துடன் மயிலாடுதுறைக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்திலுள்ள திருப்புன்கூர் சிவலோகநாதருக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்கள் தகுதிக்கேற்றபடி வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Comments
Post a Comment