Posts

Showing posts from 2024

பழமுதிர்சோலை முருகன்

#பழமுதிர்சோலை #முருகன் தொடர்ச்சியாக 15 வாரம் பழமுதிர்சோலை ஸ்தல முருகனுக்கு வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் செய்தால், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். *#குழந்தை பாக்கியம் அருளும் #பழமுதிர்சோலை #முருகன்* தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் முருகப் பெருமான். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்வழக்கு இருந்தாலும், முருகப்பெருமானுக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் ஆறுபடை வீடு என்பது முக்கியமானது. ஆறுபடை வீடுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். இந்த ஆறுபடை வீடுகளில் 6-வது தலமாக விளங்குவது ‘பழமுதிர்சோலை’ திருத்தலம். இயற்கை எழில் சூழ்ந்த சிறப்புமிக்க திருத்தலம் இது. இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. மற்ற படைவீடுகளில் இல்லாத சிறப்பு அது என்றால் மிகையல்ல. ஆம்.. ஆறுபடை வீடுகளில் இந்த படைவீட்டில் மட்டும் தான் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை என தன்னுடைய இரண்டு மனைவிகளுடனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழை வளர்த்தபடி, முருகனையே நினைத்து பாடல்களைப் பாடியவர் அவ்வையார். அவர் ஒருமுறை இந்த ...

பூமிநாதர் திருக்கோவில்

நிலம் வாங்கும் முன்னும், வீடு கட்டுவதற்கு முன்னும், வீடு கட்டும் போது தடை ஏற்பட்டாலும் இந்த கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்தால் நிவர்த்தியாகும். அது என்ன கோவில்... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள  அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் தான் அது. இங்கு மூலவர் பூமிநாதர், தாயார்   அறம்வளர்த்த நாயகி இது  500 வருடங்கள் பழமையான கோவில். அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களைத் தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமான் கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, வேண்டிய வரம் கேள் எனக் கூறினார். மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் மு...

வல்லக்கோட்டை முருகன் கோவில்

 பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பிவைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார். 🌺🌿அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் “பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால்தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்” என்றார், நாரதர். இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடித்தான். பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரத முனிவர். அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங் கினார். “துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி ப...

இலஞ்சி முருகன்

இலஞ்சி முருகன் 💥முருகனுக்குரிய பிரதான ஆலயங்களில் இலஞ்சியும் ஒன்று. அருணகிரிநாதர், ‘இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே’ என்று இந்த முருகனை பாடியுள்ளார். வள்ளி-தெய்வானை சமேதராக முருகப் பெருமான் தனிச் சந்நதியில் அருள்கிறார். 💥 திருச்செந்தூர் புராணத்தில் இலஞ்சி முருகனைப்பற்றி, ‘தேவர் மூவராவது நாமேயென்று’ என்று தொடங்கும் பாடல், வரதராஜகுமாரனென முருகனைப் புகழ்கிறது. வேண்டுவோருக்கு வரம் கொடுக்கும் வள்ளல் இந்த ராஜன் என்கிறது. 💥எது பிரம்மம் என்று காசிப முனிவரும், கபிலரும், துர்வாசரும் வாதம் புரிந்தனர். துர்வாசர் முருகனை நோக்கித் துதிக்க, மும்மூர்த்திகளும் நானே என்று முருகன் காட்சி அளித்தார். அவர்களின் ஐயங்களையும் போக்கினார். ரிஷிகளின் வேண்டுதலுக்கு இணங்கி முருகப் பெருமான் இங்கு எழுந்தருளினார். 💥இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை, மகிழ மரம் என பல பொருள்படும். ஆனாலும், இன்றைய பேச்சு வழக்கில், ஊரைக் குறிக்கும் ஆகு பெயராகவே வழங்கப்படுகிறது. 💥 ஐப்பசி கந்த சஷ்டி திருநாளில் முதல் நாள் முதல் ஐந்து நாட்களுக்கு முறையே அயன், அரி, அரன், மகேஸ்வரன், சதாசிவனாகவும் கோலம் பூண்டருள்வா...

போற்றித்திருவிருத்தம் மற்றும் போற்றிவிண்ணப்பம்

முருகப்பெருமானின் அருள் வழங்கும் போற்றித்திருவிருத்தம் (திருவருட்பா) மற்றும் போற்றிவிண்ணப்பம் (பாம்பன் சுவாமிகள்)    திருச்சிற்றம்பலம் 1. கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி  அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி  பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி  சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.  2. பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி  இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி  துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி  தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.  3. மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி  தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி  கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி  குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.  4. தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி  பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி  நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி  சிவம்பெறும் பயனே போற்றி செங்க...

சாயாவனேஸ்வரர் கோவில்

சங்கடங்கள் தீர்க்கும் வில்லேந்திய வேலவன் அமர்ந்த சாயாவனேஸ்வரர் கோவில்  🌺🌿சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலம் மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி சிறிது தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலம் மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று. 🌺🌿இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோவிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்த...

எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்) திருப்புகழ்

எத்தனை கோடி (வைத்தீசுரன் கோயில்)  (வைத்தீசுரன் கோயில் புள்ளிருக்குவேளூர் என வழங்கப்படும். இறைவன் வைத்தீசுரன் என்னும் வைத்திய நாதப் பெருமான். அம்பாள்  தையல்நாயகி. இங்கு முருகனுக்கு  முத்துக்குமரன் என்னும் திருநாமம். இத்தலம் மிகவும் பிரசித்தமான பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. நாம் எத்தனையோ ஜன்மம் எடுத்து துன்பப்பட்டுவிட்டோம். இனி முருகன் பாதம் அடைந்து அருள் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திருப்புகழ் படித்து முருகன் அருள் பெறலாம். எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமா...

சென்னிமலை முருகன்

சென்னி மலை (சஷ்டிக் கவசம் அரங்கேறிய தலம்):   🌺🌹🥀🌿🌺🥀🌹🌿🌺🥀🌹🌿🌺🥀🌹🌿🌺🥀🌹🌿🌺🥀🌹 🌺சென்னி மலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருந்திய திருத்தலம். இத்தலம் 'சிரகிரி' என்னும் பெயராலும் அறியப் படுகிறது (சென்னி என்பது 'சிரம்' எனவும், மலை என்பது 'கிரி' எனவும் பொருள்படும்). 'சஷ்டிக் கவசம்' என்னும் சக்தி வாய்ந்த பாராயணப் பாடலை 'பாலன் தேவராய சுவாமிகள்' இத்தலத்திலேயே அரங்கேற்றம் செய்து அருளினார். 🌺மூலவர் 'சிரகிரி வேலவர்' என்னும் திருநாமம் தாங்கி எழுந்தருளி உள்ளார். சஷ்டிக் கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற பாடல் வரியில் தேவராய சுவாமிகள் குறிப்பது இத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானையே. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல இறைவனை போற்றிப் பாடி மகிழந்துள்ளார்.  🌺இம்மலைக் கோயில் 1320 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் 'சிரகிரி வேலவர்' பால உருவத்திலும், ஸ்ரீவள்ளி அம்மை - தெய்வயானைத் தாயார் இருவரும் தவக்கோலத்திலும் எழுந்தருளி உள்ளனர். மூலவர் இத்தலத்தில் எழுந்தருளிய நிகழ்வு அற்புதம் நிறைந்தது. 🌺ஆதியில்,...

திருமுருகன்பூண்டி

 திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில். மூலவராக சிவனும், முயங்கு பூண் முலை வள்ளியம்மையாக அம்மனும், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணியரும் உள்ளனர்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக, பாண்டியர், சோழர் என பலரால் திருப்பணி செய்யப்பட்டு, கட்டட கலைகளை ஒருங்கே கொண்டதாகவும், கோவில் அமைப்பு முதல் அனைத்தும் எதிர்மறையாகவும், வித்தியாசமாகவும் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த தலமாக இக்கோவில் உள்ளது. திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன், தேவர்களுக்காக, அச்செயலை செய்திருந்தாலும், சிறந்த சிவபக்தரை அழித்ததால், பிரம்ம ஹத்தி, வீர ஹந்தி தோஷம் பிடித்தவராக, மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறினார். அனைத்தையும் மறந்த அவர், இப்பிரச்னையில் இருந்து மீள பிரம்மாவிடம் வரம் கேட்டார். முல்லை வனக்காட்டில் உள்ள சிவனை வழிபட்டால், உனது தோஷம் நீங்கும் என அவர் தெரிவித்துள்ளார். உடனே, முல்லை வன காட்டில் எழுந்தருளியிருந்த மங்களாம்பிகை சமேத மாதவனேஸ்வரர் கோவிலை சுப்ரமணியர் தேடியுள்ளார். ஞான திருஷ்டியும் இல்லாததால், பூண்டியில் உள்ள கோவில் அருகே இருந்த பிரம்ம தீர்த்தத்தில் குளித்துவிட்டு, தனது கையால் லிங்கத்தை வடிவமைத்...

ஓதிமலைமுருகன்

ஓதிமலைமுருகன். சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும். புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்.. சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது. பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித...

தபஸ் குமாரஸ்வாமி

கந்தனருள் ஓங்கும் பொங்கு திருத்தலம் ! கொங்கணகிரி திருப்பூர் அருகில் சிறு குன்றின் மீது சுயம்புவாக, தபஸ் குமாரஸ்வாமியாக கந்தன் கோயில் கொண்டிருக்கும் அற்புதமான தலம். சுமார்1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் தலம், சித்தர்களில் ஒருவரான கொங்கணரால் இக்கோயில் நிர்மாணிக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள். கருவறையில் வள்ளிதெய்வானை தேவியருடன் அருள்கிறார் முருகன்.  மூலவர் பிரதிஷ்டையின்போது யந்திர ஸ்தாபனம் விக்கிரகங்களுக்குக் கீழே பதிக்கப்படும். இக்கோயிலில் பீடத்திலேயே யந்திரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'ஸ்வாமி யந்திர ரூபமாக எழுந்தருளியுள்ளது, இந்தக் கோயிலின் சிறப்பம்சம்’ என்கிறார்கள் பக்தர்கள் மேலும், மூலவர் முன் சமர்ப்பிக்கப்படும் பால் தானாகவே பொங்கும் அதிசயம், இக்கோயிலின் சாந்நித்தியத்துக்குச் சான்று. இதனாலேயே இத்தலத்தை பொங்கு திருத் தலம் எனப் போற்றுகின்றனர். மற்றோர் அற்புதம், குன்று முழுவதும் திகழும் பால (பாலை) மரம்.  இப்பகுதி மக்கள், சுபகாரியங்களில் இந்த மரத்தின் குச்சியை எடுத்துச் சென்று பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த நற்காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது நம்பிக்கை கோயிலின் வ...

வேல்மாறல்

வேல் மாறல் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என துளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே (இதையே பன்னிருமுறை சொல்லவும்) 1. பருத்தமுலை சிறுத்த இடை வெளூத்த நகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் 2. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என துளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே 3. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழு மறத்தைநிலை காணும் 4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிக ராகும் 5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுனை தெறிக்கவர மாகும் 6. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் 7. துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர் துணை யாகும் 8. தலத்திலுள கணத்தொகுதி களிப்பின்உண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் 9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்து வழி காணும் 10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த...

வேழ மகளும் வேட மகளும்

வேழ மகளும் வேட மகளும்! முருகா சரணம்...  'கோதை குறமாது குணதேவமடமாது இரு பாலும் உற வீறிவரு குமரேசா’ (திருப்புகழ்) சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளாக வெளிவந்து, ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தவழ்ந்து, உமாதேவியார் எடுத்து அணைக்க, ஆறுமுகன் வடிவம் பெற்றான். அக்னி சொரூபனான முருகப்பெருமானிடம் மூன்று சக்திகள் உள்ளன. இச்சா சக்தி- வள்ளி (விழைவாற்றல்)- இகம் அளிப்பவள்; கிரியா சக்தி- தெய்வானை (செயலாற்றல்) பரம் கொடுப்பவள்; ஞான சக்தி- வேல் (அறிவாற்றல்) வீடுபேற்றை அருள்வது. இதில் வேலவனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் திகழும் வள்ளி- தெய்வானை குறித்த திருக்கதைகளும், தகவல்களும் தத்துவ ரஸம் மிகுந்தவை. ஒருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் லயித்து இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது. திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின் மகள்களாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, அந்தப் பெண்கள் திருமுருகனை நோக்கித் தவம் ...

சஷ்டி விரதம்

இன்று சஷ்டி விரதம் ஆடி மாத வளர்பிறை சஷ்டி விரதம் சகல செல்வங்களையும், சுகபோகங்களையும், புத்திரலாபமும் தரவல்ல சஷ்டி விரதமும் அதன் சிறப்பும் ! ஓம் சரவண பவ ஓம் "வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை"  இன்றைய சிறப்பு : சஷ்டி விரதம்.சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.  வழிபாடு: முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் . சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெற வாழ்வில் அனைத்துச் செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும். சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத...

திருச்செந்தூர் முருகப் பெருமானின் அற்புதங்கள்

💥திருச்செந்தூர் முருகப் பெருமானின் அற்புதங்கள் திருச்செந்தூர் முருகன் பற்றிய தகவல்கள்.                 திருச்செந்தூர் முருகனை நாம் தரிசிக்க செல் லும் பொழுது இறங்கி தான் செல்ல வேண்டும் தரிசித்துவிட்டு வரும்பொழுது ஏறித்தான் வர வேண்டும் இது எதைக் குறிக்கிறது என்றால் நாம் கந்தனை தரிசிக்க எவ்வளவு இறங்கி சென்றாலும் தரிசித்த பின்பு நம் வாழ்க்கையி ல் என்றும் ஏற்றம்தான் இருக்கும் என்று உணர்த்துகிறது. ◆திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண் முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரம ணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.  ◆திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. ◆திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவ ருக்கு பூஜை நடத்தப்படுகிறது. ◆மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படு கிற து. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும். ◆மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ள...

திருச்சிராப்பள்ளி திருப்புகழ்

🌺திருப்புகழ் 548 அந்தோ மனமே (திருசிராப்பள்ளி) 🌺(மனதுக்கு உபதேசமாக அமைந்த மிக அரிய பாடல் இது. 'மனமே, உடலை நம்பாதே. இது இன்ப-துன்பத்திக்கு இடமாகிய ஒரு இயந்திரம். பிரம்மன் ஏதோ ஆய்ந்து பூட்டிய பூட்டு இது. [ எப்போது அவிழுமோ தெரியாது.] ஆனால் நாம் பயப்படாமல் என்ன செய்யவேண்டுமென்றால் , இந்த உடலை வீணே கழிக்காமல், க்ரவுஞ்ச மலையைத் தூளாக்கிய வேலவருக்கு அடிமை செய்து, அவர் தந்த சீட்டையும், விபூதிப் பொட்டலத்தையும் நல்ல அறிகுறியாக ஏற்று, சதாகாலமும் "மைந்தா குமரா " என ஓதவேண்டும்' என்கிறார் அருணகிரியார். சிராப்பள்ளி் என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே," என்கிறார் . அதாவது, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, என்று திரும்பத் திரும்பச் சொல்வோரின் உள்ளத்தையே தன் கோயிலாகக் கொண்டு விடுகிறானாம் முருகன்! எத்துணை தலப் பெருமை!"திருச்சிராப்பள்ளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே" என்கிறார் அப்பர் பெருமானும். அதாவது, சிராப்பள்ளி என்று சொன்னதும் தீவினை ஓடி விடுமாம். அத்தகைய சீரும் பேரும் பெற்ற திருத்தலப் பாடலில், அலை பாயும் மனதை நிலைப்படுத்த வழிகள் சொல்கிறார் அருணகிர...

உனைத் தினம் | திருப்பரங்குன்றம் திருப்புகழ்

திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) அருணகிரிப் பெருமான், நாம் அன்றாடம் செய்ய வேண்டிய, எப்போதும் எல்லா சமயத்திலும் செய்ய வேண்டிய, ஆனால் செய்யத் தவறும் சிலவற்றைத் தன்னுடைய தவறுதல்களாகப் பட்டியலிட்டு நம் சார்பில் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். காலன் வரும்போது காட்சி பெற வேண்டும் என்பதே அது. அந்தக் கடைசி நேரத்தில் இறைவனுடைய எண்ணம் மனத்திலே அழுந்த நிற்க வேண்டுமானால், அதற்காக இப்பொழுதிலிருந்தே ஒவ்வொரு கணமும் நினைத்து நினைத்துப் பழகினாலொழிய, யமபயம் வருத்தும் அந்த இடர்ப்பாடான தருணத்தில் இறைவனுடைய நினைப்பு வருவது என்பது சற்றும் முடியாத ஒன்றே. அதைத்தான் இந்தத் திருப்பரங்கிரித் திருப்புகழில் சொல்லி, இறைவனிடம் நமக்காகக் கையேந்துகிறார்.) 🌺தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ......

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்! 1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார். 2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும். 3. இத்தலத்தில் 3001 அந்தணர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள் அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மாறியது. 4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார். 5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும். 6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது. 7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார். 8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத...