Posts

Showing posts from August, 2019

கழுகுமலை ஸ்ரீபைரவர்

Image
கழுகுமலை ஸ்ரீபைரவர் அபார வெற்றி தரும் ஸ்ரீபைரவர் தரிசனம்  - கழுகுமலை ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்.. இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தானுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான். அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது. குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும்...

செண்பகவல்லி அம்மன் கோவில்

Image
செண்பகவல்லி அம்மன் கோவில்         ஏழு அடியில் நின்ற நிலையில் ஒளி வீசும் கருணையான திருமுகம் கொண்ட செண்பகவல்லி அம்மனின் தரிசனம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது .கிழக்கு நோக்கி தனி சன்னிதியில்அம்மன்  எழுந்து அருளியிருக்கும் இத்திருக்கோவில் மதுரையை மீனாட்சி அம்மனை போன்றே அம்மனுக்காக சிறப்பு பெற்ற கோவிலாகும்.  மூலவர் : பூவநாதர் தாயர் : செண்பகவல்லி அம்மன் ஊர் : கோவில்பட்டி மாவட்டம் : தூத்துக்குடி திறக்கும் நேரம் : காலை6 மணி முதல் 11 மணி வரை மலை 4 மணி முதல் 8 மணி வரை அம்மனுக்கு முக்கியத்துவம் தரும் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவிலையும் கோவிற்புரியையும் (இன்று கோவில்பட்டி ) அமைத்து  சாப நிவர்த்தி பெற்ற செண்பக மன்னனால்இக்கோவில் தோற்றுவிக்கபட்டதால் இக்கோவில் செண்பகவல்லி அம்மன் கோவில் என வழங்க பெற்றது . சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்பு தலைவர்கள் இறைவனை பூவான பூக்களால் அர்ச்சித்து வந்தால் இங்கு இருக்கும் மூலவர் பூவனநாதர் என்று அழைக்கபடுகிறார். அகத்தியர் தோற்றுவித்த அகத்தியர் தீர்த்தம் இங்கு உள்ளதால் இங்கு வழிபட்ட...

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் - மதுரை             மதுரை மீனாட்சி அம்மன் கோவிலானது உலக புகழ் பெற்றது அந்த மீனாட்சி அம்மனின் வரலாறுடன் தொடர்பு கொண்ட மதுரையில் உள்ள முக்கியமான ஒரு திருத்தலம் இந்த இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில். மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்திற்கு மிக அருகிலும் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் அருகிலும் உள்ளது. மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சி அம்மனை மணமுடித்த சுந்தரேஸ்வரர்(சிவபெருமான்) திருமணத்திற்கு பிறகு மலையத்துவஜன் ஆண்ட மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்கும் முன்பு சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்து பொறுப்பேற்று கொண்டார். அப்படி சிவபெருமானே சிவலிங்கத்தை பூஜித்த ஸ்தலம் இதுவாகும். இத்திரு கோவிலானது மேற்கு நோக்கி உள்ளது. இங்கு சிவலிங்கமானது கிழக்கி நோக்கி இருக்க சிவபெருமானும் அன்னையும் மேற்கு நோக்கி  இருந்து சிவலிங்கத்தை பூஜிக்கும் வகையில் இருப்பதால் நாம் லிங்கத்தின் பின்புறத்தை தரிசிக்கும் படியாக வித்தியாசமாக அமையபெற்ற ஸ்தலம் ஆகும். இம்மை மறுமை என இரு வகையான பிறவிகளில் இம்மை பிறவி (இந்த பிறவி ) யில் செய்த நல்லவற்...

அமிர்தகடேசர் திருக்கடம்பூர் திருக்கோவில்

Image
அமிர்தகடேசர் திருக்கடம்பூர் திருக்கோவில்                             மூலவர்: அமிர்தகடேஸ்வரர் உற்சவர்: சோமாஸ்கந்தர் அம்மன்: வித்யூஜோதிநாயகி தல விருட்சம்: கடம்பமரம் தீர்த்தம்: சக்தி தீர்த்தம் புராண பெயர்: திருக்கடம்பூர் ஊர்: மேலக்கடம்பூர் மாவட்டம்: கடலூர் மாநிலம்: தமிழ்நாடு அபிராமி அம்மன் சந்நிதி                 நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, "வித்யஜோதிநாயகி' (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின...

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் !!

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் !! மூலவர் : காயாரோகணேஸ்வரர். தல விருட்சம் : மாமரம் உள்ளது. பழமை 1000 - 2000 வருடங்களுக்கு முன்பு. ஊர் : நாகப்பட்டினம். மாவட்டம் : நாகப்பட்ட...

சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயம்

   சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயம்     பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயம். ஐந்து சபைகளில், பொற்சபை என்ற சிறப்பை பெற்ற திருத்தலம். பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயம். ஐந்து சபைகளில், பொற்சபை என்ற சிறப்பை பெற்ற திருத்தலம். ‘சித்’ என்றால் ‘அறிவு’ அல்லது ‘ஞானம்’, ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ அல்லது ‘வெளி’ என்று பொருள். ‘சிதம்பரம்’ என்பதற்கு ‘அறிவு வெளி’ அல்லது ‘ஞான வெளி’ ஆகிறது. முன் காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த வனமாக இருந்ததால் ‘தில்லை நகர்’ என்றும், பெருவெளி வடிவமானதால் ‘சிதம்பரம்’ என்றும், புலிக்கால் கொண்ட முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம் ஆகையால் ‘புலியூர்’ என்றும், பொன் தகடுகளால் வேயப்பட்ட ஆலயம் என்பதால் ‘பொன்னம்பலம்’ என்றும் பல பெயர்களால் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. முதன்மைக் கடவுளான சிவன் பரவியிருக்கும் உலகின் வடிவில், திருவாரூர் மூலதாரமாகவும், திருவண்ணாமலை மணிப்பூரகமாகவும், திருக்காளத்தி கழுத்தாகவும், திருவானைக்கா நாபியாகவும், காசி புருவ மத்தியாகவும், சிதம்பரம் இர...

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

Image
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் - முதல் படை வீடு                                             திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். 247 தேவாரத் திருத்தலங்களில் ஒன்று ஆகும்.                  நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பாடி உள்ளனர்.                           இங்கு மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் சுப்பிரமணியர், துர்க்கையம்மன், கற்பகவிநாயகர், மூவரும் அடுத்து                     அடுத்து உள்ளனர். கற்பகவிநாயகர் முன்பு இடப்புறம் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), மற்றும் சுப்பிரமணியர் முன்பு வலப்புறத்தில் பவளக்கனிவாய்ப் பெருமாள்,   என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரைய...