Posts

Showing posts from April, 2024

சிவன் மலை உத்தரவு பெட்டியில் வேல்

Image
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். வேறு எந்த முருகன் கோவிலும் இல்லாத சிறப்பம்சமாக இங்கு ஆண்டவரின் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது.  முருகப்பெருமான் ஒருவரின் கனவில் தோன்றி குறிப்பிட்டு ஒரு பொருளைக் கூறி அதனைக் கோவில் முன் மண்டப தூணில் உள்ள உத்தரவு பெட்டியில் அதனை வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற அந்த பக்தர் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் சென்று கூறினால் அவர்கள் சாமியிடம் பூ போட்டு கேட்டுவிட்டு பின்பு அந்த பக்தரின் கனவில் வந்த அந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இதற்காக கால நிர்ணயம் கிடையாது. மீண்டும் வேறு ஒருவரின் கனவில் வந்து வேறு ஒரு பொருளை வைக்கும் வரை இந்த பொருள் இருக்கும். தற்போது இங்கு உத்தரவு பெட்டியில் வேல் வைக்க உத்தரவு வந்துள்ளது. இப்போது அங்கு வேல் வைத்து  உள்ளார்கள்.  அந்த உத்தரவு பெட்டியில் உள்ள பொருளுக்கு ஏற்ப நிகழ்வுகள் உலகில் நடக்கும். 

திருச்செந்தூர் பற்றி திருப்புகழில்

திருச்செந்தூர் பற்றி திருப்புகழில்  ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர்  செந்திலம் பதி வாழ்வே... ( அங்கை மென்குழல் திருப்புகல்) திருச்செந்தூர் எப்படி இருந்ததாம் தெளிந்தநீர் நிரம்பிய குளங்களும்  சோலைகளும் நிறைந்த ஊராகவும், சங்குகள்   விள ங்கும்  நகராக இருந்ததாம்  திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கிப் புரள ... எறி திரை மகர சங்க துங்க திமிர சல நிதி தழுவு ... உருட்சியாகத் திரளும் மணியும் முத்தும் உயர்ந்த தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி   அவற்றை  அள்ளி வீசுகின்ற அலைகளையும் மகர மீன்களையும்  சங்குகளையும் உடைய பரிசுத்தமான கடல் நீர் அணைந்துள்ள  கரையை உடைய ----------------Continue editing ----------------------------------------------------------------------  

கந்தகோட்டம்

 ஒருமையுடன்  நினது  திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும் உள்ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் மதிவேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. -மகான் இராமலிங்க சுவாமிகள் உரை: கந்தகோட்டத்தில் குடிகொண்ட முருகா, உனது திருவடியை தினமும் முழுமனதுடன் தியானிக்கின்ற உத்தமர்களின் தொடர்பு கிட்ட வேண்டும். மனதில் ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு வெளியே வேறான்றாகப் பேசுகின்ற பொய்யர்களின் தொடர்பு சேராமை வேண்டும்.பெருமையுடன் உனது கீர்த்தியைப் புகழ்ந்து பேசவேண்டும். பெருமைமிக்க சன்மார்க்க நெறியை கடைப்பிடித்து செல்ல வேண்டும். செருக்கு என்னும் பேய் பிடிக்காதிருக்க வேண்டும். பெண் ஆ...