சிறுவாபுரி முருகன் அற்புதங்கள்
சிறுவாபுரி என்றாலே அண்டர்பதி குடியேற எனும் திருப்புகழ் முருகன் அடியார்களுக்கு நினைவுக்கு வரும்.
வீடு கட்டி குடியேற ஏற்படும் தடைகளை அகற்றி ஒருவர் சொந்த வீட்டில் குடியேற இந்ந திருப்புகழும் இந்த திருப்புகழ் பாடப் பெற்ற தலமான சிறுவாபுரியும் உதவுவதாக கூறுகிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி குழந்தை வரம் வேண்டி இந்ந சிறுவாபுரி முருகனை காண தொடர்ந்து 6 வாரங்கள் சென்று உள்ளார். ஆனால் அதன் இடையில் அவர்கள் எதிர்பாரத விதமாக அவர்களுக்கு சொந்தமாக இடம் வாங்கும் வாய்ப்பு அமைந்து இடம் வாங்கி உள்ளனர்.
அப்படி அற்புதங்கள் நிறைந்த அற்புதமான ஸ்தலம் சிறுவாபுரி.
சென்னையில் இருந்து 40 கீமீ தொலைவுக்குள் கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இங்கே முருகப்பெருமானை ஸ்ரீ பாலசுப்ரமணியர் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலில் ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனும் உள்ளனர்.
மேலும் சிறுவாபுரியில் முருகப்பெருமானைத் தவிர சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகர், ஆதிமூலர், நவக்கிரகங்கள், கால பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
சிறுவாபுரியில் இந்த கோவிலில் மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிறுவாபுரிக்கு சென்று உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர்.
மரகதம் பச்சைக் கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திரு உருவங்கள் அமைந்த ஸ்தலம் சிறுவாபுரி.
அர்ச்சனை திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் சிறுவாபுரி
மிகத்தீவிரமான முருகபக்தை முருகம்மை எனும் பெண்மணி. சிறுவாபுரியில் வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணின் கணவர் எப்போது பார்த்தாலும் மனைவியை சந்தேக கண்ணுடனே பார்த்து உள்ளார். ஒரு நாள் ஆத்திரம் கொண்ட அந்தக் கணவர் அவளின் கையை துண்டித்து விட்டார். இப்படி ஒரு நிலையிலும் முருகப்பெருமானே நினைத்து கந்தனின் திருநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார் முருகம்மை எனும் அந்த பெண்மணி. அவரின் பக்தியில் மகிழ்ந்த முருகப்பெருமான் பெண்மணிக்கு திருக்காட்சி தந்து அவரின் வெட்டப்பட்ட கையோ ஒன்று சேர்ந்தது இந்த அற்புதமான சிறுவாபுரி ஸ்தலத்தில் என்கிறார்கள்.
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற எனும் திருப்புகழை சிறுவாபுரி முருகனை நினைத்து பக்தியுடன் படித்தாலும் அல்லது சிறுவாபுரி தலத்திற்க்கு வந்து முருகப்பெருமானை தரிசித்து இந்த திருப்புகழை படித்தாலும் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றி தருவார் முருகப் பெருமான்.
சிறுவாபுரி ஸ்தலத்துக்கு ஆறு செவ்வாய் கிழமை வந்து ஆறுமுகப் பெருமானை மனமுருகி வேண்டிக் கொண்டால் காரியம் யாவும் நடந்தேறும் என்பது ஐதீகம்.
Comments
Post a Comment