Posts

Showing posts from November, 2022

கோயில் கந்தன்குடி முருகன்

கோயில் கந்தன்குடி முருகன்  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள கோயில் கந்தன்குடி கிராமத்தில் புகழ்பெற்ற வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த ஸ்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம். இரண்டு அசுரர்களால் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு அழிவு ஏற்படும் என அன்னை பராசக்தி நினைத்த காரணத்தினால், தன்னுடன் வந்த குழந்தையான முருகனைத் தங்கி இருக்கும்படி கூறியதால், முருகன் தங்கிய இந்த ஸ்தலம், கந்தன்குடி என பெயர் பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் முருகப் பெருமானை மணக்கோலம் கொள்ள, ஸ்ரீதேவசேனா அன்னை தவம் பூண்டு தென்திசை நோக்கி தனி ஆலயம் கொண்டு விளங்கி வருகிறார். தேவேந்திரன், ஐராவதம் என்று சொல்லக்கூடிய இரட்டை தந்தங்களுடைய வெள்ளை யானையை, தனது மகனின் தவத்தைக் காக்க கந்தன்குடிக்கு அனுப்பியதால், ஸ்ரீ முருகப் பெருமானுக்கு எதிரில் இங்கு ஐராவதம் வாகனமாக காட்சியளிப்பது தனி சிறப்பு .

பஞ்சகடம்ப தலங்கள்

                                                                                                    நிறைந்த கார்த்திகை அமாவாசை திருநாளில் தோஷங்கள் அனைத்தும் விலக்கி அருளும் கடம்பன் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் பஞ்ச கடம்ப தலங்கள்   பஞ்ச கடம்ப தலங்கள்: முருகப்பெருமான் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் வேல் வாங்கி சூரபத்மனை சம்ஹாரம் செய்ததால் வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தைப் போக்க, தந்தை சிவபெருமானின் ஆணைக்கேற்ப, முருகப்பெருமான் சிக்கலுக்கு அருகில் உள்ள தேவாரப் பாடல் தலமான கீழ்வேளூர் தலத்தில் சிவபூஜை செய்து, அத்தலத்தை சுற்றியுள்ள 9 தலங்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து அங்கும் பூஜித்து, தோஷம் நீங்கப் பெற்றார். அவற்றில் மிக முக்கியமான ஐந்து தலங்கள், பஞ்சகடம்ப திருத்தலங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.  கந்தா! கடம்பா! என்றழை...