Posts

Showing posts from 2021

அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

Image
அருள்மிகு விராலிமலை சுப்ரமணிய சுவாமி  திருக்கோயில்  அருணகிரிநாதருக்கு முருகபெருமான் வேடன் வடிவில் வந்து இந்த கோவிலுக்குவர வழி காட்டிய ஸ்தலம்.முருகபெருமானின் அருள் நிறைந்த            தலம் என்று குறிப்பிடும் படியாக மயில்கள் இந்த மலையில் நிறைந்து காணபடுகின்றன.    திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சியில் இருந்து ௨௦க்ம தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது  கோவிலின் வரலாறு  அன்றைய நாட்களில் வாகை எனும் மரங்கள் இங்கு நிறைந்து இருந்தன. அந்த காலத்தில் வேடன் ஒருவன் வேங்கையை துரத்தி சென்றான். அப்போது அவனுக்கு போக்கு காட்டிய வேங்கை இங்கும் அங்கும் ஓடியது. அதனை அவன் துரத்தி சென்றான். முடிவில் அது இங்கு வந்து இங்குள்ள வாகை மரத்தின் இடையில் மறைந்து போனது. அப்போது அங்கு திடீர் என்று மயில் தோன்றியது மேலும் விபுதி வாசனை தோன்றியது. அதை கண்ட வேடன் இங்குள்ள மக்களிடம் எடுத்துக்கூறி இங்கு முருகனுக்கு ஆலயம் அமைந்ததாக வரலாறு கூறுகிறது.    

குசமாகி யாருமலை(திருவான்மியூர்) திருப்புகழ்

குசமாகி யாருமலை(திருவான்மியூர்) குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை குடிலான ஆல்வயிறு                  குழையூடே குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்      குழல்கார தானகுண                   மிலிமாதர் புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி      புலையேனு லாவிமிகு              புணர்வாகிப் புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை      பொலிவான பாதமல               ரருள்வாயே நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு      நிகழ்பொத மானபர             முருகோனே நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு      நிபுணாநி சாசரர்கள்                குலகாலா திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி      சிவநாத ராலமயில்              ...

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் படபெற்ற திருத்தலங்கள்

1. அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் , மயிலாப்பூர், சென்னை  மூலவராக கபாலீஸ்வரர் மற்றும் தாயாராக கற்பகாம்பாள் அருள் பலிக்க கூடிய இத்திருதலத்தில் உள்ள சிங்காரவேலர் (முருக பெருமான் ) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழை பாடி அருளி உள்ளார். இங்கு பாடிய திருப்புகழ் பாடல்கள்  1.அமரும் அமரர்  2.அயில் ஒத்து எழும்  3.அறமிலா அதி  4.இகல வருதிரை  5.இனையது இலதாம்  6.கடிய வேக  7.களபம் மணி ஆரம் 8.திரைவார் கடல்  9.நிறைதரு மணியணி  10.வரும் மயில் ஒத்தவர் என தொடங்கும் திருப்புகழ் பாடல்களை இந்த தலத்திற்காக பாடப்பெற்றுள்ளன  2.அருள்மிகு  கந்தசுவாமி கோவில், திருப்போரூர்,  காஞ்சிபுரம் மாவட்டம்  இங்கு மூலவராக கந்தசுவாமி அருள்பாலிக்கும் திருத்தலம் . சமராபுரி வாழ் சண்முகத்தரசே என கந்த சஷ்டியில் வரும் வரிகள் இத்தலத்தை குறிக்கின்றன . அனுத்தே னர்மொழி     உருக்கு ஆர் வாழி  சீர் உலாவிய  திமிர மாமன  என தொடங்கும் திருப்புகழ் பாடல்களை இந்த தலத்திற்காக பாடப்பெற்றுள்ளன  3.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவ...

இடரினும் தளரினும் - செல்வம் பெருக தொழில் சிறக்க படிக்க வேண்டிய பதிகம்

 திருச்சிற்றம்பலம்  இந்த பதிகமானது திருஞானசம்பந்தர் அவர்களால் திருவாடுதுறை தலத்தில் இருக்கும் இறைவனை வேண்டி பாடப்பெற்ற பதிகம். இதில் திருஞானசம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்கு பொருள் வேண்டி பாடிய பதிகம். உலக நன்மைக்காய் செய்யும் வேள்விக்கு இறைவனிடம் பொருள் வேண்டி பாடிய பதிகம். தொழில் சிறக்க வருமானம் பெருக படித்து வரலாம் .    இடரினுந் தளரினும் எனதுறுநோய்   தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்   கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை   மிடறினில் அடக்கிய வேதியனே   இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்   அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….1    வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்  வீழினும் உனகழல் விடுவேனல்லேன்  தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்  போழிள மதிவைத்த புண்ணியனே  இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்  அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….2   நனவினுங் கனவினும் நம்பாவுன்னை  மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்  புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த  கனலெரி யனல்புல்கு கையவனே  இதுவோஎமை ...

மதுரை மீனாட்சி அம்மன் ‌தங்க குதிரையில்

மதுரை மீனாட்சி அம்மன் தங்க குதிரையில்  - 👈 click and watch