Posts

முருகன் தினசரி ஜப மந்திரங்கள்

🕉 முருகன் தினசரி ஜப மந்திரங்கள் 1. காலை – புத்துணர்ச்சி & வெற்றி ஷடக்ஷர மந்திரம் (Six-Syllable Mantra) 🕉 ஓம் ஷண்முகாய நம: (Om Ṣaṇmukhāya Namaḥ) 📿 ஜபம் : 108 முறை (ருத்ராட்சம் அல்லது சந்தன மாலை) பலன் : மன தெளிவு, துணிவு, வாழ்க்கையில் முன்னேற்றம் 2. நண்பகல் – பாதுகாப்பு & சக்தி கந்த சஷ்டி கவசம் (தொடக்க மந்திரம்) "வேலாயுதனுக்கு அரோகரா!" (Velāyudhanukku Arokara!) 📿 ஜபம் : 27, 54 அல்லது 108 முறை பலன் : எதிரிகள், துஷ்ட சக்திகள் விலகும்; உடல் ஆரோக்கியம் மேம்படும் 3. மாலை – ஞானம் & ஆனந்தம் சுப்ரமண்ய காயத்ரி மந்திரம் 🕉 ஓம் ஷண்முகாய வித்மஹே மகாதேவாய தீமஹி தன்ன: ஸ்கந்த: ப்ரசோதயாத் 📿 ஜபம் : 9, 27 அல்லது 54 முறை பலன் : கல்வி, ஆன்மிக வளர்ச்சி, குடும்ப அமைதி வழிபாட்டு குறிப்புகள் வியாழக்கிழமை மற்றும் சஷ்டி நாளில் சிறப்பு ஜபம் செய்யவும் சிவப்பு அல்லது மஞ்சள் மலர் சமர்ப்பிக்கவும் நெய் தீபம் ஏற்றி, மந்திரத்தை மனம் ஒருமுகப்படுத்தி சொல்லவும்

குரு தோஷ நிவாரணத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள்

  🛕 தமிழ்நாட்டில் குரு தோஷ நிவாரணத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள் குரு தோஷம் என்பது ஜாதகத்தில் குரு கிரகத்தின் பாதிப்பு காரணமாக வாழ்க்கையில் தாமதம், பொருளாதார சிரமம், திருமண தடை, கல்வி பிரச்சினைகள் போன்றவை ஏற்படுவதாக ஜோதிடம் கூறுகிறது. இந்த பாதிப்பை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் சில புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 1. ஆ ல ங்குடி அபத்சகாயேஸ்வரர் கோவில் இடம் : கும்பகோணம் அருகே, தஞ்சாவூர் மாவட்டம் தெய்வம் : அபத்சகாயேஸ்வரர் (சிவபெருமான்), வலம்புரி வினாயகர், தெய்வநாயகி அம்மன் சிறப்பு : நவகிரகங்களில் குரு பகவானுக்கு சிறப்பான ஸ்தலம். குரு பகவானின் பிரதான ஸ்தலம் (Guru Sthalam). வழிபாடு : குரு பெயர்ச்சி காலத்தில் பசும்பால் அபிஷேகம், மஞ்சள் அர்ச்சனை, வில்வார்ச்சனை. பலன் : கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், பண முன்னேற்றம். 2. திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோவில் இடம் : ராக்க்ஃபோர்ட், திருச்சி தெய்வம் : தாயுமானவர் (சிவன்), மதுரை மீனாட்சி அம்மன் சிறப்பு : திருமண தடை மற்றும் குடும்ப ஒற்றுமைக்கு குரு அருள் வேண்டுவதற்கான ச...

நவகிரஹங்களின் சிறப்பு

*நவகிரஹங்களின்_சிறப்பு.(மகத்துவம்)* *01) சூரியன்* காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரஹங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரஹங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு ~ கிழக்கு. அதிதேவதை ~ அக்னி. ப்ரத்யதி தேவதை ~ ருத்திரன். ஸ்தலம் ~ சூரியனார் கோவில். நிறம் ~ சிவப்பு. வாகனம் ~ ஏழு குதிரைகள் பூட்டிய ரதம். தானியம் ~ கோதுமை. மலர் ~ செந்தாமரை., எருக்கு. வஸ்திரம் ~ சிவப்பு. ரத்தினம் ~ மாணிக்கம். அன்னம் ~ ரவா., கோதுமை., சர்க்கரைப் பொங்கல்.      *02) சந்திரன்* பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும்., தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. திக்கு ~ தென்கிழக்கு. அதிதேவதை ~ ஜலம். ப்ரத்யதி தேவதை ~ கௌரி. ஸ்தலம் ~ திருப்பதி. நிறம் ~ வெள்ளை. வாகனம் ~ வெள்ளைக் குதிரை. தானியம் ~ நெல். மலர் ~ வெள்ளை அரளி. வஸ்திரம் ~ வெள்ளாடை. ரத்தினம் ~ முத்து. அன்னம் ~ தயிர் சாதம். *03) அங்காரஹன் (செவ்வாய்)* இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர்., பாவ/புண்ணிய பலனைக் கொடுக்கும் குருரார். மேஷம்., விருச்சி...

குருந்தமலை

குரு இருந்த மலை " குருந்தமலை" (இன்னொரு பழனி ) - அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயில், காரமடை (கோவை) காரமடையிலிருந்து 5 கி.மீ. தொலைவில், கோயம்புத்தூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.  சுமார் 750 வருடங்களுக்கு முன் இக்கோவில் உருவானதாக தெரிகிறது. ஆலயத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் ஹோய்சாள மன்னர் காலத்தை ஒத்து இருக்கின்றன.. செல்வம் பெருகவும், புத்திரபேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வேலாயுதனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு "குருந்த மரங்கள்" நிறைய இருந்த காரணத்தால்  குருந்த மலை என பெயர் வந்ததாகவும், அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்தது உபதேசித்ததால் குருந்த மலை என பெயர் வந்ததாகவும் இரு வேறு கருத்துக்கள் உண்டு. ˜மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பாகும் கருவறை விமானமும் பழநி முருகன் கோயிலில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியரும் சூரியனும் கார்கோடன், புஜங்கள் எனும் நாகங்களும் பூஜித்த தலமிது. முருகனின் வாகனங்களில் மயிலுக்கும் நாகத்திற்கும் ஒரு தனிச் சிறப்புண்டு அல...

மயிலம் முருகன் சிறப்புகள்

மயிலம் முருகன் சிறப்புகள் - 🌺🌹🌿🌺🌹🌿🌺🌹🌿🌺🌿🌺🌿🌺🌿 🌺🌿1. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது. 🌺🌿2. முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள். 🌺🌿3. கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. 🌺🌿4. மயிலம் கோவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை. 🌺🌿5. மயிலம் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது. 🌺🌿6. மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது. 🌺🌿7. பாலசித்தர் தவம் புரியும...

திருவெண்காடு

ஏழு ஜென்ம கர்மவினை பதிவில் இருந்து விடுபட திருவெண்காடு சூர்ய தீரத்தம்,சந்திர தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம்(முக்குளங்களில்) நீராடும் வழிபாடு:  தலைக்குமேல் சிறிய இலையில் பச்சை பயிறு வைத்து கொண்டு தம்பதி சமேதராக திருவெண்காடு தலத்தில் உள்ள அக்கினி, சூரிய, சந்திர ஆகிய மூன்று தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில் மூழ்கி நீராடி புதன் கிரகம்,மற்றும் இத்தலத்தில் உள்ள மூன்று மூர்த்திகளான சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தியையும் மற்றும் இத்தலத்தில் உள்ள மூன்று சக்திகளான பிரம்ம வித்யாநாயகி, காளிதேவி, துர்க்கை ஆகியோரையும் இத்தலத்தில் உள்ள மூன்று தலவிருட்சங்களான வடவால், வில்வம், கொன்றையையும்,இத்தலத்தின். சந்திர தீர்த்தம் அருகில் உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியில் ருத்ரபாதத்தையும் தரிசனம் செய்பவர்களது ஏழு ஜென்ம கர்ம வினை பதிவிலிருந்தும் விடுபட்டு சகல செல்வங்களையும் பெறுவார்கள் இது நடை முறையில் கண்ட உண்மை . திருவெண்காடு தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் உள்ள ருத்ர பாதத்தின் அருகில் நமது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்கள் செய்தால் 21 தலைமுறையில் வருகின்ற பிதுர...

திருமுருகன்பூண்டி

திருமுருகன்பூண்டி - திருப்பூர் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீ மங்களாம்பிகையுடன் ஸ்ரீ மாதவனேஸ் வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு. தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது ஸ்தல புராணம். சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப்...