Posts

Showing posts from August, 2022

அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை

வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டியது அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்  பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.  இரவு அர்த்த ஜாமத்தில்  மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும். இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவர். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.  மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூ...

மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்

மதுரையில் மீனாட்சி தினமும்  8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.  இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.  அவை .. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி ப்ராத சந்தியில் – பாலா 6 – 8 நாழிகை வரையில் –  புவனேஸ்வரி 12 – 15 நாழிகை வரையில் – கெளரி மத்யானத்தில் – சியாமளா சாயரக்ஷையில் – மாதங்கி அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.  இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.  அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும். *ஒரேநாளில்* *புவனேஸ்வரி*, *கௌரி,சியாமளா*, *மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள த...