Posts

Showing posts from April, 2019

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள் ராமேஸ்வரம், திருராமேஸ்வரம், குருவிராமேஸ்வரம், காமேஸ்வரம் ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன. இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்' எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில்,  ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன. தொடர்ந்து நான்கு மாதங்கள்... ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில், ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும். 1. ராமேஸ்வரம் தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம். ஸ்ரீராமர் - சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்...

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்

சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள் தெரியுமா? 1   ஆகாயம்: சென்னையில் அமைந்திருக்கும் ஆகாயஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும்.இதன் மூலவர் திருமூலநாதசுவாமி ஆவார். NO:112,அவதான பாப்பையா தெரு,சூளை , சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில்  சென்னை-112 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. 7C, 7B, 7D, 164, 59, 159 என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து புவனேஸ்வரி திரையரங்கம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். காலை 6 மணி முதல் 11.30 வரையிலும்,மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். 1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும். தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு 8.30க்கு நடைபெற்றுவருகிறது. 2   மண்: சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. இங்கே ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மனுடன் அருள் புரிந்து வருகிறார். தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில் வன்னிமரத...

ஓதிமலை முருகன்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முக...

திருக்கொள்ளிக்காடு - வேலை கிடைக்க வழிபட வேண்டிய ஆலயம்

வேலை கிடைக்கவில்லையா? இத்தலத்திற்கு செல்லுங்கள்..!!                                     திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்..!!                    இன்று படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படும் பட்டதாரிகளும், ஏதாவது ஒரு வேலை கிடைச்சா போதும் என தேடி அலைவபர்களும் வழிபடக்கூடிய ஆலயம் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் . ஆலயத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு :  மூலவர் : அக்னீஸ்வர சுவாமி   தாயார் :  மிருது பாத நாயகி   சனி பகவான் : பொங்கு சனி   முருகர்  : தனுசு சுப்பிரமணிய சுவாமி  ஸ்தல விருட்சம் : வில்வம்  தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்                                இது 1000 முதல்  2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு ஸ்தலம்.  இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக ...